Tuesday, December 30, 2008

மறைந்து வாழ நேரிடும் போது?

தமிழகத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு தமிழ் ஆர்வம் மிக்க ஒரு IAS அதிகாரியிடமிருந்து (சில நண்பர்கள் வழியாக) பெறப் பட்ட கருத்துகள் இவை.

ஒரு குறிப்பிட்ட முதல்வருக்கு நெருக்கமாக இருப்பதாக கருதப் பட்டதால், தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இவருக்கு மிகச் சிறிய அலுவலகத்தில் அதிக முக்கியத்துவம் இல்லாத ஒரு பதவி தரப் பட்டது. பொதுவாக இறையாண்மை தேர்வுகள் (Civil Services) எழுதுபவர்கள் இவரை ஒரு சிறந்த முன்னோடியாக கருதுவதால், எனது சில நண்பர்களும் இவரை தேர்வு நிமித்தமாக நேரில் சென்று சந்தித்தனர். அப்போது, மிக பிரபலமான ஒரு IAS அதிகாரியின் அலுவலகம் மிகச் சிறியதாகவும் சுறுசுறுப்பு குறைந்ததாகவும் இருப்பதைக் கண்டு ஆச்சர்யப் பட்டு அவரிடம் அது குறித்து வினவினர். மேலும் அரசியல் காரணங்களினால் அவருக்கு அநீதி இழைக்கப் பட்டிருப்பதாக வருந்தினர்.

அதற்கு அவர் அளித்த பதில்கள் கீழே.

தனக்கு இந்த பதவி கிடைத்திருப்பது தனக்கு இழைக்கப் பட்ட அநீதியாக தான் கருதவில்லை. பொதுவாக, இறையாண்மை பணிகள் (IAS) மிகுந்த மன அழுத்தமும் ஒரு நாளின் அனைத்து நேரத்தினையும் எடுத்துக் கொள்வதாகவும் இருப்பதால், ஒரு IAS அதிகாரியால் அவரது குடும்பத்துக்கும் உரிய நேரம் வழங்க முடிவதில்லை. ஆனால் இப்போதோ, அலுவலகம் எடுத்துக் கொள்ளும் நேரம் குறைவாக இருப்பதினால், குடும்பத்திற்கு அதிக நேரம் கொடுக்க முடிகிறது. மேலும் சிறந்த புத்தகங்கள் படிப்பது மற்றும் உடல் நலம் பேணுவது போன்ற நல்ல பழக்கங்களுக்கும் நேரம் ஒதுக்க முடிகிறது. எனவே வருங்காலத்தை சிறப்பபாக அமைத்து கொள்ள தனக்கு கிடைத்த வாய்ப்பாகவே இதை கருதுகிறேன் என்று கூறினார்.

ஒவ்வொரு மனிதர்க்கும் இது போன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் தேக்க நிலை ஏற்படும் போது ஒரு குறிப்பிட்ட காலம் வரை (தேக்கதிலிருந்து மீளும் வரை) உலக பார்வையிலிருந்து மறைந்து வாழ வேண்டிய விராட பருவத்தை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.

அந்தக் கால கட்டங்களில் மனது சோர்வு அடைந்து விடாமல், கிடைக்கும் தருணத்தை மேற்சொன்னது போல (வருங்காலங்களுக்கு தயார் படுத்திக் கொள்வது) சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும் போது பாண்டவர்கள் வனவாசத்திற்கு (குறிப்பாக விராட பருவத்திற்கு) பிறகு பெரிய வெற்றிகளை அடைந்தது போல போன்ற நம்மாலும் வெற்றிகளைப் பெற முடியும்.

நன்றி.

No comments: